பணகுடி முந்தைய காலத்தில் பனைவளம் நிறைந்த பகுதியாக காணப்பட்டது. இங்கு கத்தோலிக்க மக்கள் இல்லை. வடக்கன்குளம், காவல்கிணறு, கள்ளிகுளம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ நாடார்கள் பனைத்தொழில் செய்வதற்காக இப்பகுதியில் வந்து குடியேறினார்கள். கி.பி. 1870-ல் வடக்கன்குளம் பங்குத்தந்தையாக இருந்த Fr. கிரகோரி அவர்கள் 5 ஏக்கர் நிலத்தை பணகுடியில் வாங்கி 2 ஏக்கர் நிலத்தை கோயில் கட்டுவதற்காகவும், மீதி 3 ஏக்கர் நிலத்தை ஒவ்வொரு கிறிஸ்தவ குடும்பத்திற்கு 2 சென்ட் வீதம் இனாமாக கொடுத்ததாக கூறப்படுகிறது...
இத்தாலியில் இறைப்பணி செய்து தாய் மண்ணை நோக்கி வந்த என்னை வரவேற்றது புனித சூசையப்பர் ஆலயம். சிறுவயதிலிருந்தே புனித சூசையப்பர் என்றாலே எனக்கு தனிப்பற்று. எனவே பணகுடி பங்குத்தளத்தை நான் மிகவும் விரும்பி பெற்றுக் கொண்டேன். அதிலும் புனித சூசையப்பருக்கு புதிய ஆலயம் சுட்டும் பணி எனக்கு கிடைத்ததை எண்ணி பெருமகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய குருத்துவ வாழ்வில் இது எனக்கு கிடைத்த மாபெரும் பாக்கியமாக கருதுகிறேன். எனது குருத்துவ வாழ்வில் என்றும் மறக்க முடியாதது பணகுடி பங்கு ஆலயம் கட்டும் பணியில் என்னோடு இருந்து செயல்பட்ட எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறி கொள்கிறேன். பங்கின் ஆலய பணிக்காக என்னால் முடிந்தவரை பணி செய்கிறேன். ஆயிரக்கணக்கான பணகுடி மக்களின் நல்லுள்ளத்தாலும், பேராதரவாலும், தியாக நன்கொடைகளாலும், கடின உழைப்பாலும் கட்டப்பட்டதுதான் நம் ஆலயம். நாம் மட்டுமல்ல, மத, இன, மொழி, ஊர் கடந்து தாராளமான நன்கொடைகளால் நம் ஆலயத்தை தாங்கிய சூசையப்பர் பக்தர்கள் ஏராளம். அந்த நல்லுள்ளங்களை தந்த இறைவனுக்கு நன்றி கூறுவோம் கடந்த ஐந்து ஆண்டுகளாக நன்கொடைகளும், ஆலய கட்டுமான வரிகளும் பிரிப்பதற்காக நான், ஊர் தலைவர், நிர்வாகிகள், கட்டுமான பணி நண்பர்களுடன் உங்கள் வீடு தேடி வந்து ஓராயிரம் தடவை அன்பு தொல்லை கொடுத்திருப்பேன். ஆனால் பணகுடி இறைமக்கள் என்னை மதித்து ஆதரவும், ஒத்துழைப்பும் தந்து புன்முறுவலோடு எங்களை வரவேற்றீர்கள்! கொடுத்தீர்கள்! அதன் தாக்கம்தான் தென்தமிழகத்திலே தலைசிறந்த கோயிலாக உருப்பெற்றுள்ளது புனித சூசையப்பர் திருத்தலம். எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி கூறுவோம். நற்கருணைப் பேழையில் ஆண்டவர் இயேசுவின் உயிருள்ள பிரசன்னமிருப்பதால் அன்றாடம் ஆலயத்திற்கு வந்து நலம் தரும் நற்கருணையைப் பெற்று சுகம் பெறுவோம். என் தந்தையின் இல்லத்தை பொழுதுபோக்கு இடமாக்கக் கூடாது என்ற இயேசுவின் கூற்றை வாழ்வாக்கி இந்த பணகுடி மண்ணை புண்ணிய பூமியாக மாற்றுவது நம் ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து அர்த்தத்தோடு இவ்விழாவை கொண்டாடுவோம். இவ் ஆலயம் உருப்பெற காரணமாயிருந்த ஊர் நிர்வாகிகள், கட்டுமானக் குழு நண்பர்கள், இறைமக்கள், நன்கொடையாளர்கள் மற்றும் அன்பிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் சிறப்பான பாராட்டுக்கள். வானுயர்ந்த புதிய ஆலய கோபுரம் போன்று நம் மக்களின் வாழ்வும் வளமும், ஆன்மீகமும் தலைசிறந்து உயர்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.
திருவழிபாடு 2ஆம் ஆண்டு பொதுக்காலம் 3ஆம் வாரம் 30.01.2026 - வெள்ளி
முதல் வாசகம் நீ நம்மைப் புறக்கணித்து, உரியாவின் மனைவியை உனக்கு மனைவியாக்கிக் கொண்டாய்.
சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 11: 1-4a, c, 5-10a, 13-17.
அந்நாள்களில், இளவேனில் காலத்தில் அரசர்கள் போருக்குப் புறப்பட்டுச் செல்வது வழக்கம். அப்பொழுது தாவீது யோவாபைத் தம் பணியாளரோடும் இஸ்ரயேலர் அனைவரோடும் அனுப்பினார். அவர்கள் அம்மோனியரைத் தோற்கடித்து இரபாவை முற்றுகை இட்டனர். தாவீதோ எருசலேமிலேயே தங்கிவிட்டார்.
ஒரு நாள் மாலை வேளை, தாவீது தம் படுக்கையிலிருந்து எழுந்து அரண்மனை மாடியில் உலாவிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்ததை தாவீது மாடியிலிருந்து கண்டார். அவள் மிகவும் அழகிய தோற்றம் கொண்டிருந்தாள். தாவீது அவள் யாரென்று கேட்க, ஆள் அனுப்பினார். “அவள் எலியாவின் மகளும் இத்தியர் உரியாவின் மனைவியுமான பத்சேபா” என்று கூறினர். தாவீது தூதரை அனுப்பி அவளை வரவழைத்தார். அவள் தம்மிம் வந்ததும் அவர் அவளோடு உடலுறவு கொண்டார். பிறகு அவள் தன் இல்லம் சென்றாள். அப்பெண் கருவுற்றுத் தாவீதிடம் ஆள் அனுப்பி, தான் கருவுற்றிருப்பதாக அவரிடம் தெரிவித்தாள்.
அப்பொழுது தாவீது “இத்தியனான உரியாவை என்னிடம் அனுப்பிவை” என்று யோவாபுக்குச் செய்தி அனுப்பினார். யோவாபு உரியாவைத் தாவீதிடம் அனுப்பி வைத்தார். உரியா தாவீதிடம் வந்ததும் அவர் யோவாபின் நலம் பற்றியும் வீரர்களின் நலம் பற்றியும் போரின் போக்குப் பற்றியும் விசாரித்தார். பிறகு தாவீது உரியாவிடம், “உன் வீட்டுக்குச் சென்று உன் பாதங்களைக் கழுவிக்கொள்” என்றார். உரியா அரண்மனையை விட்டுச் சென்றதும் அவர் பின்னாலேயே அரசர் அன்பளிப்பு அனுப்பி வைத்தார். உரியாவோ தம் தலைவரின் பணியாளர் அனைவரோடும் அரண்மனை வாயிலிலேயே படுத்துக்கொண்டார்; தம் வீட்டுக்குச் செல்லவில்லை. உரியா தம் வீட்டுக்குச் செல்லவில்லை என்று தாவீது அறிந்ததும் தாவீது அவரிடம், “நீ நெடும் தொலையிலிருந்து வரவில்லையா? பின் ஏன் நீ வீட்டிற்குச் செல்லவில்லை?” என்று கேட்டார். தாவீது அவரை அழைத்து அவரோடு உண்டு குடித்து, அவருக்குக் குடிபோதையூட்டினார். மாலையில் அவர் தம் தலைவரின் பணியாளரோடு தம் படுக்கையில் தூங்கச் சென்றார்; தம் வீட்டுக்கு அவர் செல்லவே இல்லை.
காலையில் தாவீது யோவாபுக்கு ஒரு மடல் எழுதி, அதை உரியாவின் கையில் கொடுத்தனுப்பினார். அம்மடலில் அவர், “உரியாவைப் போர் கடுமையாக நடக்கும் முன்னிலையில் நிறுத்தி, அவனைவிட்டுப் பின்வாங்கு. அவன் வெட்டுண்டு மடியட்டும்” என்று குறிப்பிட்டிருந்தார். யோவாபு நகரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தபொழுது வலிமைமிகு எதிர்வீரர்கள் இருந்த இடத்தை அறிந்து அங்கே உரியாவை நிறுத்தினார். நகரின் ஆள்கள் புறப்பட்டுவந்து யோவாபைத் தாக்கினர். அப்பொழுது போரில் வீழ்ந்தவர்களுள் தாவீதின் வீரர்களும் சிலர். இத்தியர் உரியாவும் மாண்டார்.
பதிலுரைப் பாடல் திருப்பாடல்கள் 51: 1,2. 3,4a. 4bc,5. 8,9.
பல்லவி: (1a) கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக! என் பாவங்களைப் பாராதபடி உம் முகத்தை மறைத்துக் கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். பல்லவி: கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத்தேயு 11: 25.
அல்லேலூயா, அல்லேலூயா! "தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்.” அல்லேலூயா, அல்லேலூயா!
நற்செய்தி வாசகம் நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 26-34.
அக்காலத்தில், இயேசு கூட்டத்தை நோக்கி, “இறையாட்சியைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்: நிலத்தில் ஒருவர் விதைக்கிறார். அவர் எதுவும் செய்யாமலே நாள்கள் நகர்ந்து செல்கின்றன. அவருக்குத் தெரியாமல் விதை முளைத்து வளர்கிறது. முதலில் தளிர், பின்பு கதிர், அதன்பின் கதிர் நிறைய தானியம் என்று நிலம் தானாகவே விளைச்சல் அளிக்கிறது. பயிர் விளைந்ததும் அவர் அரிவாளோடு புறப்படுகிறார்; ஏனெனில் அறுவடைக் காலம் வந்துவிட்டது” என்று கூறினார்.
மேலும் அவர், “இறையாட்சியை எதற்கு ஒப்பிடலாம்? அல்லது எந்த உவமையால் அதை எடுத்துச் சொல்லலாம்? அது கடுகு விதைக்கு ஒப்பாகும். அது நிலத்தில் விதைக்கப்படும்பொழுது உலகிலுள்ள எல்லா விதைகளையும் விடச் சிறியது. அது விதைக்கப்பட்டபின் முளைத்தெழுந்து எல்லாச் செடிகளையும்விடப் பெரிதாகி, வானத்துப் பறவைகள் அதன் நிழலில் தங்கக்கூடிய அளவுக்குப் பெருங்கிளைகள் விடும்” என்று கூறினார்.
அவர்களது கேட்டறியும் திறமைக்கு ஏற்ப, அவர் இத்தகைய பல உவமைகளால் இறைவார்த்தையை அவர்களுக்கு எடுத்துரைத்து வந்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு பேசவில்லை. ஆனால் தனிமையாக இருந்தபோது தம் சீடருக்கு அனைத்தையும் விளக்கிச் சொன்னார்.
Liturgical Year 2 Ordinary Time 3rd Week 30.01.2026 - Friday
First Reading A reading from the Second Book of Samuel 11: 1-4a, 5-10a, 13-17.
At the turn of the year, when kings go out on campaign, David sent out Joab along with his officers and the army of Israel, and they ravaged the Ammonites and besieged Rabbah. David, however, remained in Jerusalem. One evening David rose from his siesta and strolled about on the roof of the palace. From the roof, he saw a woman bathing, who was very beautiful. David had inquiries made about the woman and was told, “She is Bathsheba, daughter of Eliam, and wife of Joab’s armor bearer Uriah the Hittite.” Then David sent messengers and took her. When she came to him, he had relations with her. She then returned to her house. But the woman had conceived, and sent the information to David, “I am with child.”
David, therefore, sent a message to Joab, “Send me Uriah the Hittite.” So Joab sent Uriah to David. When he came, David questioned him about Joab, the soldiers, and how the war was going, and Uriah answered that all was well. David then said to Uriah, “Go down to your house and bathe your feet.” Uriah left the palace, and a portion was sent out after him from the king’s table. But Uriah slept at the entrance of the royal palace with the other officers of his lord, and did not go down to his own house. David was told that Uriah had not gone home. On the day following, David summoned him, and he ate and drank with David, who made him drunk. But in the evening Uriah went out to sleep on his bed among his lord’s servants, and did not go down to his home. The next morning David wrote a letter to Joab which he sent by Uriah. In it he directed: “Place Uriah up front, where the fighting is fierce. Then pull back and leave him to be struck down dead.” So while Joab was besieging the city, he assigned Uriah to a place where he knew the defenders were strong. When the men of the city made a sortie against Joab, some officers of David’s army fell, and among them, Uriah the Hittite died.
Responsorial Psalm Psalms 51: 3,4. 5,6a. 6bcd,7. 10,11.
(R) (3a) Be merciful, O Lord, for we have sinned.
Have mercy on me, O God, in your goodness; in the greatness of your compassion wipe out my offence. Thoroughly wash me from my guilt and of my sin cleanse me. (R) Be merciful, O Lord, for we have sinned.
For I acknowledge my offence, and my sin is before me always: “Against you only have I sinned, and done what is evil in your sight.” (R) Be merciful, O Lord, for we have sinned.
I have done such evil in your sight that you are just in your sentence, blameless when you condemn. True, I was born guilty, a sinner, even as my mother conceived me. (R) Be merciful, O Lord, for we have sinned.
Let me hear the sounds of joy and gladness; the bones you have crushed shall rejoice. Turn away your face from my sins, and blot out all my guilt. (R) Be merciful, O Lord, for we have sinned.
Gospel Acclamation Matthew 11: 25.
(R) Alleluia, Alleluia. Blessed are you, Father, Lord of heaven and earth; you have revealed to little ones the mysteries of the Kingdom. (R) Alleluia, Alleluia.
Gospel Reading From the Gospel according to Mark 4: 26-34.
Jesus said to the crowds: “This is how it is with the Kingdom of God; it is as if a man were to scatter seed on the land and would sleep and rise night and day and the seed would sprout and grow, he knows not how. Of its own accord, the land yields fruit, first the blade, then the ear, then the full grain in the ear. And when the grain is ripe, he wields the sickle at once, for the harvest has come.”
He said, “To what shall we compare the Kingdom of God, or what parable can we use for it? It is like a mustard seed that, when it is sown in the ground, is the smallest of all the seeds on the earth. But once it is sown, it springs up and becomes the largest of plants and puts forth large branches, so that the birds of the sky can dwell in its shade.” With many such parables, he spoke the word to them as they were able to understand it. Without parables, he did not speak to them, but to his own disciples, he explained everything in private.
Copyright © St.Joseph Church Panagudi. All Rights Reserved.